கோவை தனியார் மருத்துவமனை காவலாளிகள் தாக்கியதால் ஒருவர் உயிரிழப்பு..? - போலீசார் தீவிர விசாரணை

அவிநாசி சாலையில் உள்ள KMCH மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த ராஜா என்ற நபரை, அங்கு பணியில் இருந்த காவலாளிகள் திருட வந்ததாக கூறி தாக்கியதில் அவர் உயிரிழந்து விட்டதாக, குடும்பத்தார் புகார். மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் தீவிர விசாரணை.



கோவை: கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி(எ) ராஜா. இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு பள்ளி செல்கின்ற வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள கே எம் சி ஹெச என்ற தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற ராஜாவை அங்குள்ள காவலாளிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக ராஜாவின் மனைவி சுகன்யா குற்றம் சாட்டியுள்ளார்.



இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சுகன்யா, சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதாக கூறிவிட்டு சென்ற அவரது கணவரை, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கம்பிகளை திருட வந்துள்ளதாக கூறி மருத்துவமனை வளாகத்தில் இருந்த காவலாளிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தை சேர்ந்த சிலர் இணைந்து கடுமையாக தாக்கி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் மயக்கம் அடைந்த ராஜா அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சம்பவத்திற்கு பின்னர் தான் வீட்டில் இருந்த போது போலீசார் என்று கூறி மருத்துவமனையை சேர்ந்த மூவர் தனது வீட்டிற்கு வந்து தன்னை புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றதாகவும், இதன் தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு சென்று தனது கணவர் நிலை குறித்து கேட்டு போராடிய பின்னரே தனது கணவர் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, தாக்குதலில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜாவின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகாரின் பேரில், மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக, மருத்துவமனை காவலாளிகள், நிர்வாகத்தினர் என 11 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல தனியார் மருத்துவமனை வளாகத்தில் வைத்து, ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...