கோவை தனியார் மருத்துவமனை காவலாளிகள் தாக்கியதால் ஒருவர் உயிரிழப்பு..? - போலீசார் தீவிர விசாரணை

அவிநாசி சாலையில் உள்ள KMCH மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த ராஜா என்ற நபரை, அங்கு பணியில் இருந்த காவலாளிகள் திருட வந்ததாக கூறி தாக்கியதில் அவர் உயிரிழந்து விட்டதாக, குடும்பத்தார் புகார். மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் தீவிர விசாரணை.



கோவை: கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி(எ) ராஜா. இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு பள்ளி செல்கின்ற வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள கே எம் சி ஹெச என்ற தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற ராஜாவை அங்குள்ள காவலாளிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக ராஜாவின் மனைவி சுகன்யா குற்றம் சாட்டியுள்ளார்.



இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சுகன்யா, சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதாக கூறிவிட்டு சென்ற அவரது கணவரை, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கம்பிகளை திருட வந்துள்ளதாக கூறி மருத்துவமனை வளாகத்தில் இருந்த காவலாளிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தை சேர்ந்த சிலர் இணைந்து கடுமையாக தாக்கி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் மயக்கம் அடைந்த ராஜா அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சம்பவத்திற்கு பின்னர் தான் வீட்டில் இருந்த போது போலீசார் என்று கூறி மருத்துவமனையை சேர்ந்த மூவர் தனது வீட்டிற்கு வந்து தன்னை புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றதாகவும், இதன் தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு சென்று தனது கணவர் நிலை குறித்து கேட்டு போராடிய பின்னரே தனது கணவர் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, தாக்குதலில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜாவின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகாரின் பேரில், மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக, மருத்துவமனை காவலாளிகள், நிர்வாகத்தினர் என 11 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல தனியார் மருத்துவமனை வளாகத்தில் வைத்து, ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...