கோவை புலியகுளம் பகுதியில் பாம்பை பிடித்து வீடியோ வெளியிட்ட பெண் உட்பட இருவர் மீது வனத்துறை வழக்குப்பதிவு

சாரை பாம்புகள் விஷமற்றவை, அவற்றால் மனிதர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை என வீடியோ வெளியிட்ட உமா, அப்துல் ரஹ்மான் ஆகியோர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்ட வனத்துறை அலுவலகம் இன்று மே.28 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடும் பணிகளில் தன்னார்வ அமைப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை புலியகுளம் பகுதியில் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒரு வீட்டில் இருந்துள்ளது.

இது தொடர்பாக கிடைக்கபெற்ற தகவலின் பேரில் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினரான அப்துல் ரஹ்மான் மற்றும் சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா ஆகியோர் அந்த பாம்பை பிடித்தனர்.

இதனை கோவை வனச்சரக அலுவலர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.



இதனிடையே சாரை பாம்பை பிடித்த போது, சாரை பாம்புகள் விஷமற்றவை. அவற்றால் மனிதர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை எனவும், பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்ற விழிப்புணர்வு வீடியோவை அவர்கள் இருவரும் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அது வைரலானது.

இந்த நிலையில் பாம்பை மீட்ட அப்துல் ரஹ்மான் மற்றும் உமா மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனுமதியின்றி பிடித்து செல்போனில் வீடியோ எடுத்து துன்புறுத்தியதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக வனத்துறையினர் அண்மையில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் வனத்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு பின்னர் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடித்த தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினரான இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட வனப்பாதுகாவலரிடம் கேட்ட போது இதுபோன்று, மற்றவர்கள் ஈடுபடக்கூடாது எனவும், நல்லெண்ண அடிப்படையில் இருவரும் செயல்பட்டதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்தார். வீடியோ சமூக ஊடங்களில் வைரல் ஆனது தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...