கோவை காந்திபுரம் கிராஸ்கட் சிக்னலில் இலவசமாக ஹெல்மெட் வழங்கி வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை விழிப்புணர்வு

காந்திபுரம் கிராஸ்கட் சிக்னலில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதனை கோவை மாநகர போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் பயணிப்போருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இதனிடையே காந்திபுரம் கிராஸ்கட் சிக்னலில் போக்குவரத்து காவல்துறை எஸ்.ஐ கார்த்திக், டிராபிக் வார்டன் பிரபு மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் இன்று (மே.28) வாகன தணிக்கை நடத்தினர்.



அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியத்தைஎடுத்துக்கூறி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...