கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநரிடம் மனு

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பிக்கும்போது, எந்தவித விதிகளையும் கடைப்பிடிக்காமல் சோ்க்கை நடத்த வேண்டும் என்று கோவையைச் சோ்ந்த மாநில ஆதிதிராவிடா் நலக்குழு முன்னாள் உறுப்பினா் செல்வகுமார், உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் வெங்கடேசன், சமூக ஆா்வலா் எஸ்.சுபாஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநரிடம் மனு அளித்தனர்.


கோவை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயம் என்ற அடிப்படையில் எஸ்சி, எஸ்டியினருக்கு ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவையைச் சோ்ந்த மாநில ஆதிதிராவிடா் நலக்குழு முன்னாள் உறுப்பினா் எஸ்.செல்வகுமார், உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் வெங்கடேசன், சமூக ஆா்வலா் எஸ்.சுபாஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மனிடம் நேற்று மே.24 மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் கீழ் அனைத்து தனியார், சுயநிதி, சிறுபான்மையின பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு வகுப்பில் 25 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். மேற்படி சட்டத்தின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயம் என்ற அடிப்படையில் எஸ்சி, எஸ்டியினா் உள்ளனா்.

மேலும், தூய்மைப் பணியாளா்கள், ஆதரவற்ற விதவைகளின் குழந்தைகள் போன்றோரும் இந்த பிரிவில் அடங்குவா். இந்த சட்டத்தின்படி மேற்கண்ட பிரிவைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கும்போது, எந்தவித விதிகளையும் கடைப்பிடிக்காமல் சோ்க்கை நடத்த வேண்டும். ஆனால், பல பள்ளிகளில் சிறப்புப் பிரிவினருக்கு நேரடி சோ்க்கை நடத்தாமல், பொதுப்பிரிவில் அந்த இடங்களை வைத்துவிடுவதால் சிறப்புப் பிரிவினருக்கான சலுகை மறுக்கப்படுகிறது. இதனால் இந்த சட்டத்தின் நல்ல நோக்கம் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. எனவே இது தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...