கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வீட்டின் கேட்டில் தலையை மாட்டிய நாய் பத்திரமாக மீட்பு

வண்ணார் கோவில் பகுதியில், வீட்டின் கேட்டில் தலையை மாட்டிக்கொண்டு போராடிய நாயை, அதன் கழுத்து பகுதியில் எண்ணெய்யை ஊற்றி தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வண்ணார் கோவில் பகுதியில் வீட்டின் கேட்டில் தலை சிக்கி போராடிக்கொண்டிருந்த நாயை பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினர் அரை மணி நேரம் போராடி கழுத்து பகுதியில் எண்ணை ஊற்றி லாவகமாக மீட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வண்ணார் கோவில் என்ற இடத்தில் வீட்டின் கேட் ஒன்றில் நாய் ஒன்று தலை உள்ளே விட்டு மாட்டியிருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினருக்கு தகவல் வந்துள்ளது.



சம்பவ இடத்திற்குச் சென்ற நிலைய அலுவலர் கார்த்திகேஷன், சுரேஷ் குமார் மற்றும் சதீஷ் கண்ணன், வேல்முருகன், மோகன்ராஜ் ஆகியோர் நாயின் கண்களை துணி கொண்டு கட்டி, கழுத்து பகுதியில் எண்ணை ஊற்றி அரை மணி நேரம் போராடி லாவகமாக மீட்டனர்.



அந்த நாயை மீட்கும் போது அருகே அதனுடைய நண்பன் நாய் பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...