கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வீட்டின் கேட்டில் தலையை மாட்டிய நாய் பத்திரமாக மீட்பு

வண்ணார் கோவில் பகுதியில், வீட்டின் கேட்டில் தலையை மாட்டிக்கொண்டு போராடிய நாயை, அதன் கழுத்து பகுதியில் எண்ணெய்யை ஊற்றி தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வண்ணார் கோவில் பகுதியில் வீட்டின் கேட்டில் தலை சிக்கி போராடிக்கொண்டிருந்த நாயை பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினர் அரை மணி நேரம் போராடி கழுத்து பகுதியில் எண்ணை ஊற்றி லாவகமாக மீட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வண்ணார் கோவில் என்ற இடத்தில் வீட்டின் கேட் ஒன்றில் நாய் ஒன்று தலை உள்ளே விட்டு மாட்டியிருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினருக்கு தகவல் வந்துள்ளது.



சம்பவ இடத்திற்குச் சென்ற நிலைய அலுவலர் கார்த்திகேஷன், சுரேஷ் குமார் மற்றும் சதீஷ் கண்ணன், வேல்முருகன், மோகன்ராஜ் ஆகியோர் நாயின் கண்களை துணி கொண்டு கட்டி, கழுத்து பகுதியில் எண்ணை ஊற்றி அரை மணி நேரம் போராடி லாவகமாக மீட்டனர்.



அந்த நாயை மீட்கும் போது அருகே அதனுடைய நண்பன் நாய் பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...