பொள்ளாச்சி நா.மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பில், தேர்தல் அலுவலர்கள், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் நுண் பார்வையாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை: பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டி இயந்திரங்கள் உடுமலை சாலையில் உள்ள நா.மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.



தேர்தல் முடிவுகள் அறிவிக்க இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கையின் போது ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்றது.



தேர்தல் அலுவலர்கள், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் நுண் பார்வையாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு வாக்கு எண்ணும் தினத்தன்று அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா அளித்த பேட்டியின் போது, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி ஒருசுற்றுக்கு 14 டேபிள்கள் என மொத்தம் 84 டேபிள் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் 335 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல் கட்ட பயிற்சியானது இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்று கட்ட பயிற்சி அலுவலர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் அலுவலர்கள், மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் செல்போன்கள் கொண்டு வர அனுமதி இல்லை.

பத்திரிக்கையாளர்களுக்கு தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். காலை 8 மணியளவில் தபால் வாக்குகளும், 8.30 மணி அளவில் வாக்குப் பெட்டி இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும்பணியும் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...