உடுமலை அருகே புத்த பூர்ணிமா விழாவை முன்னிட்டு புத்தம்மம் அறிவுத்திருக்கோவில் சிறப்பு வழிபாடு

பூர்ணிமா விழாவை முன்னிட்டு புத்தருக்கு அமராவதி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு புனித நீர் ஆற்றுதல் நிகழ்ச்சி, சிறப்பு வழிபாடு சிறப்பு பிரார்த்தனை, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன .


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் புத்ததம்மம் அறிவுத் திருக்கோவிலில் கௌதம புத்தரின் 2586 ஆவது பிறந்தநாள், ஞானம் பெற்ற நாள் மற்றும் இறந்த நாள் மூன்றும் ஒரே நாளில் அமையும் புத்தபூர்ணா விழா இன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

முன்னதாக பூர்ணிமா விழாவை முன்னிட்டு புத்தருக்கு அமராவதி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு புனித நீர் ஆற்றுதல் நிகழ்ச்சி, சிறப்பு வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை,மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன .

இந்தநிகழ்வில், மேல்மருவத்தூர் தலைமை குரு அசோகா புத்த விகார் பதானன்ட் நாகராஜ், மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மௌரியர் புத்தர், செல்வரபுரம் திருக்கோவில் தலைமை குரு கௌதம காளியப்பன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் திருப்பதி, மடத்துக்குளம் ஒன்றியம் ஊடகப்பிரிவு நம்பி ராஜ் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



பிரார்த்தனை கூட்டத்தில் மேல்மருவத்தூர் தலைமை குரு அசோகா புத்த விகார் பேசும் பொழுது, அனைவரும் பூத்தரின் போதணைகளை பின்பற்ற வேண்டும், குறிப்பாக அனைத்துதர மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், நல்லதை செய்ய வேண்டும், கெட்டதை செய்ய கூடாது, மனதை தூய்மை படுத்தபட வேண்டும் உட்பட பல்வேறு அறிவுரைகளை இன்றைய பூத்த பூர்ணிமா நாளில் பின்பற்ற வேண்டும் என உறுதி மொழி எடுப்போம் என தெரிவித்தார். இறுதியாக அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டு புத்த பூர்ணிமா விழா நிறைவு பெற்றது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...