மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து - சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மீண்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் சேவையை இன்று (மே.23) ஒரு நாள் ரத்து செய்வதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மலை ரயில் சேவையை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது.

பின்னர் ரயில் பாதையை சீரமைக்கும் பணி நிறைவு மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்ததால் மீண்டும் நேற்று (22.5.24) மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று இரவு நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மீண்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி- ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது.



இதனால் ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன.



மேலும் மண் சரிந்து ரயில் பாதையை மூடியது.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவையை இன்று (மே.23) ஒரு நாள் ரத்து செய்வதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...