கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காவிட்டால், கோவை மாநகராட்சி மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று பீளமேடு ஏழாவது பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு பகுதியில் உள்ள ஏழாவது குறுக்கு தெருவில் மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தராத கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சார்பாக இன்று காலை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (மே.21) நடைபெற்றது.



இதில், பீளமேடு பகுதிக்கு சிமெண்ட் காங்கிரட், மழை நீர் வடிகால், மின்விளக்கு அமைக்கப்படும் என ஒப்பந்ததாரர் மூலமாக எழுத்து மூலம் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை எந்தவொரு அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. எனவே, இதனை கண்டித்து பீளமேடு ஏழாவது பகுதி மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், கோவை மாநகராட்சி இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கோவை மாநகராட்சி மீது கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தெரிவித்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...