கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை தூர்வாரும் பணி - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்க்குட்பட்ட வார்டு எண்-99 சாரதா மில் சாலை, நூராபாத் பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதாள சாக்கடை தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் இன்று (20.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100-வார்டு பகுதிகளில் மழைநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து பகுதிகளிலும் அமைந்துள்ள நீர்நிலைகள், பாதாள சாக்கடைகள் மற்றும் மழைநீர் செல்லும் பகுதிகளில் உள்ள மண்கள், குப்பைகள் அகற்றும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அந்த வகையில், மாநகராட்சி ஆணையாளர் தெற்கு மண்டலத்திற்க்குட்பட்ட வார்டு எண்-99 சாரதா மில் சாலை, நூராபாத் பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளையும், முன்னதாக,



வார்டு எண்-95 போத்தனூர் மெயின் சாலை உம்மர் நகர் பகுதியில் மழையின் போது சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பது குறித்து நிரந்தர தீர்வு காணும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு சாக்கடைகளை முழுமையாக தூர்வார அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை தூர்வாரும் பணிகளையும்,



மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.83 காளீஸ்வரா மில்ரோடு கீழ்பாலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்வாரும் பணிகளையும் மற்றும் லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்காவண்ணம் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையாளர்கள் இளங்கோ (பொ), கவிதா, செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர்கள் கனகராஜ், ஹேமலதா, பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர்கள் ஆண்டியப்பன், பரமசிவம், குணசேகரன், உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...