கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை தூர்வாரும் பணி - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்க்குட்பட்ட வார்டு எண்-99 சாரதா மில் சாலை, நூராபாத் பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதாள சாக்கடை தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் இன்று (20.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100-வார்டு பகுதிகளில் மழைநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து பகுதிகளிலும் அமைந்துள்ள நீர்நிலைகள், பாதாள சாக்கடைகள் மற்றும் மழைநீர் செல்லும் பகுதிகளில் உள்ள மண்கள், குப்பைகள் அகற்றும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அந்த வகையில், மாநகராட்சி ஆணையாளர் தெற்கு மண்டலத்திற்க்குட்பட்ட வார்டு எண்-99 சாரதா மில் சாலை, நூராபாத் பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளையும், முன்னதாக,



வார்டு எண்-95 போத்தனூர் மெயின் சாலை உம்மர் நகர் பகுதியில் மழையின் போது சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பது குறித்து நிரந்தர தீர்வு காணும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு சாக்கடைகளை முழுமையாக தூர்வார அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை தூர்வாரும் பணிகளையும்,



மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.83 காளீஸ்வரா மில்ரோடு கீழ்பாலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்வாரும் பணிகளையும் மற்றும் லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்காவண்ணம் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையாளர்கள் இளங்கோ (பொ), கவிதா, செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர்கள் கனகராஜ், ஹேமலதா, பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர்கள் ஆண்டியப்பன், பரமசிவம், குணசேகரன், உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...