டாஸ்மாக் கடை மூடலால் வேலையிழக்கும் ஊழியர்களுக்கு மாற்று வேலை தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் வேலை இழந்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



நீதிமன்ற தீர்ப்பை தொடந்து தமிழகத்தில் 3339 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் 10 ஆயிரம் டாஸ்மாக் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 153 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் வேளை இழந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என ஊழியர்கள் தொடந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று சி.ஐ.டி.யு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு மாற்றுப்பணி வழங்க கோரி மனு அளித்தனர்.

மேலும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சரக்குகளை குடோனுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும், ஆனால் கடை சாவிகளை டாஸ்மாக் அதிகாரிகள் வழங்கமறுப்பதாகவும், இதனால் கடைகளில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியிருப்பதாகவும் அச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...