திருப்பூரில் கன மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; பொதுமக்கள் அவதி

திருப்பூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் அவதிப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகரில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகல் கூடிய கருமேகங்களால் லேசான மழை பெய்ய துவங்கியது. சில நிமிடங்களில் லேசாக செய்ய துவங்கிய மழை கன மழையாக உருவெடுத்து கொட்டி தீர்த்தது.



இதன் காரணமாக திருப்பூர் மாநகரின் பல்வேறு சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையின் காரணமாக திருப்பூர் மாநகரின் ராயபுரம், கருவம்பாளையம், பிச்சம்பாளையம், குமார் நகர், ராக்கியாபாளையம், வீரபாண்டி என பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நின்றது மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



இதனடையை திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் கனமழையின் போது அங்கு சுற்றித்திரிந்த சிறுவர்கள் சிலர் தங்கள் கைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் அவர்களின் பேருந்து நிலையத்தில் தேங்கி நின்றிருந்த மழை நீரை சேகரித்து விளையாடி மகிழ்ந்து மகிழ்ந்தனர்.



சிறுவர்களின் இந்த செயல் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்கள் இடையே தங்களது சிறுவயது காலத்தை நினைவு படுத்தியது என்றே கூறலாம்.



இதனிடையே திருப்பூர் மாநகரில் பெய்த கன மழைக்கு திருப்பூர் பாண்டியன் நகர் அடுத்த மும்மூர்த்தி நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். குறிப்பாக ஜெயலட்சுமி நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இன்று பெய்த கன மழை காரணமாக அங்கு தாழ்வான பகுதிகளில் குடியிருந்த பொது மக்களின் வீடுகளுக்குள் மழை நீர் ஆனது புகுந்தது.

இதனால் வீடுகளில் இருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர் பின்னர் வீடுகளில் உள்ள பாத்திரங்கள் வாலிகளை வைத்து வீட்டுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றினர். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மழை நீர் தேங்கினாலோ அல்லது வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து தேங்கி இருந்தாலோ மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மோட்டார் மூலம் தண்ணீரை உறிந்து வெளியேற்ற வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...