கோவை மதுக்கரை மார்க்கெட் சாலையில் பேருந்தின் சக்கரங்கள் புதைந்தது - போக்குவரத்து பாதிப்பு

கோவையில் மதுக்கரை மார்க்கெட் சாலையில் அரசு பேருந்தின் சக்கரங்கள் மண்ணில் சிக்கி, இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிரேன் மூலம் சக்கரங்கள் மீட்கப்பட்டு நிலைமை சீரானது.


கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் சாலையில் அரசு பேருந்து சக்கரங்கள் மண்ணில் சிக்கி கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



காந்திபுரத்தில் இருந்து கண்ணம்மா நாயக்கனூர் வரைக்கும் செல்லக்கூடிய TN 38 N 2859 எண் கொண்ட பேருந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் இன்று மே.19 சிக்கிக் கொண்டது. 



அண்மையில் பாதாள சாக்கடை போடுவதற்கு சாலையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடித்து பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துறையினர் கிரேன் மூலம் மண்ணில் புதைந்த பேருந்தின் சக்கரங்களை மீட்டனர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...