கொடுவாய் பகுதியில் தொடர்ந்து நடக்கும் வெறிநாய் தாக்குதல்கள் - விவசாயிகள் வேதனை

திருப்பூர் கொடுவாய் பகுதியில் வெறிநாய்கள் தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சம்பவங்கள் நடந்து வருவதால் விவசாயிகள் கடும் வேதனையில், நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த கொடுவாய் எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்குட்பட்ட பங்காம் பாளையம் மற்றும் சாய்ராம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருக்களில் அலையும் நாய்களுக்கு வெறிபிடித்து கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நாளுக்கு நாள் வெறி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாகவும் அவை வீடுகள் மற்றும் தோட்டத்தில் வளர்க்கப்படும் கால்நடைகளை தாக்குவதாகவும் அப்பகுதி ஊர்ப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பங்காம்பாளையம் பகுதியில் வசிக்கும் முத்துசாமி என்ற விவசாயி தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசு கன்றுக்குட்டியை நல்லிரவு சுமார் 1 மணி அளவில் வெறிநாய் கூட்டம் சுற்றி வளைத்து கடித்து கொன்றுள்ளது.



மேலும் கன்று குட்டியை நாய்கள் வேட்டையாடுவதை பார்த்த தாய் மாடு கட்டிவைத்த பகுதியில் சுற்றி சுற்றி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து சத்தம் கேட்டு வந்த பசுவின் உரிமையாளர் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது நாய்கள் கடித்ததில் இறந்து கிடந்துள்ளது. மேலும் இது போன்ற சம்பவம் தினந்தோறும் நடைபெறுவதாகவும், இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இன்றுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த வெறிநாய்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிரை காவு வாங்குவதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் இது சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மனித உயிர்களை காவு வாங்குவதற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...