உடுமலையில் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மற்றும் அழுகிய மாம்பழங்கள் என மொத்தம் 250 கிலோ பறிமுதல்

உடுமலை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் நடத்திய ஆய்வில் இரண்டு கடைகளில் இருந்து செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மற்றும் அழுகிய மாம்பழங்கள் என மொத்தம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நகராட்சி உரக்கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்திரவின் பேரிலும், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை அறிவுறுத்தலின்படியும் உடுமலை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் உடுமலை நகரப் பகுதியில் மாம்பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது மாம்பழம் மொத்தமாக மற்றும் சில்லறையாக விற்பனை செய்யும் கடைகளில் மாம்பழங்கள் செயற்கையாக ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 250 கிலோ எடையுள்ள அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி உரக்கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு கடைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.



கோடை காலத்தில் பொதுமக்கள் அதிகமாக விரும்பி வாங்கி உண்ணும் பழமாக மாம்பழம் இருப்பதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.



மேலும் ரசாயன முறையில் செயற்கையாக மாம்பழங்களை பழக்க வைத்தால் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வும் வியாபாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...