கொளத்துப்பாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை - கட்டுப்படுத்துமாறு தாராபுரம் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு

கொளத்துப்பாளையம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 45 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றுள்ளது. ஆடுகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் 14 ஆவது வார்டு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு ஒன்றிய தலைவருமான கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு பகுதியில் குலுக்குப்பாளையம், திருவள்ளுவர் நகர், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வளர்த்து வருகின்றனர். ஆடுகளை பகல் நேரங்களில் காடுகளில் மேய்த்து இரவு நேரங்களில் மூங்கில் பட்டியலில் அடைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்குள் இடைச்சாமி என்பவரது தோட்டத்தில் 21 ஆடுகளையும், முத்து என்பவரது நான்கு ஆடுகளையும், லிங்கசாமி என்பவரது ஐந்து ஆடுகளையும், பீட்டர் குமார் என்பவரது மூன்று ஆடுகளையும், பாலு என்பவரது நான்கு ஆடுகளையும், நாட்டு துறை என்பவரது 3 ஆடுகளையும் வெறிநாய்கள் கடித்து கொதறியது. இந்நிலையில் இன்று காளியாத்தாள் என்பவரது ஆடு மற்றும் குட்டி என ஆடுகளை கடித்து சேதப்படுத்தி கொன்றுவிட்டது.

எனவே கடந்த ஒரு மாதத்திற்குள் 45 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்று குவித்துள்ளது. எனவே எங்கள் பகுதியில் ஆடு வளர்க்கும் விவசாயிகள் ஆடு வளர்ப்பை முற்றிலுமாக தொடர்ந்து ஆடுகளை வளர்க்க இயலாத சூழலில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதார தொழிலாக ஆடு வளர்ப்பு தொடர்ந்து செய்யும் விதமாக உடனடியாக ஆடுகளை கொல்லும் தெருநாய்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கூறியுள்ளனர்.

மேலும் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த மனுவை கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி தெரு நாய்களை கட்டுப்படுத்த வழிவகை செய்யப்படும் எனவும் மேலும் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...