தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்

தாவர நலம், பாதுகாப்பான வர்த்தகம் மற்றும் கணினி தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு தலைப்புகளில் நடைபெற்ற சிறந்த புகைப்படம், சிறந்த ஓவியம் மற்றும் சிறந்த கட்டுரை எழுதிய பயிர் பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த முதுநிலை மாணவர்களுக்கு துணைவேந்தர் கீதாலட்சுமி பரிசுகளை வழங்கினார்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், உலக தாவர நல தின நாளினை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு மையம் சார்பாக உலக தாவர நல தினம் கடந்த 12.05.2024 அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



இத்தினத்தன்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்து, தாவர நலத்தின் முக்கியத்துவத்தையும், குறிப்பாக எதிர்கால வேளாண்மையில் நாம் எதிர்நோக்கி உள்ள பல்வேறு சவால்களான காலநிலை மாறுபாடு, புதிய பூச்சி மற்றும் நோய்கள், பாதுகாப்பான வர்த்தகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நம் தொழில்நுட்ப உத்திகளை அதற்கு ஏறாற்போல் உருவாக்க வேண்டியது நமது கடமையாகும் என்று எடுத்துரைத்தார்.

முன்னதாக பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் முனைவர் மூ.சாந்தி, தினத்தினுடைய சிறப்பு மற்றும் நோக்கம் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தார். தேர்வு கண்காணிப்பாளர் முனைவர் வெ.யாலசுப்ரமணி, தாவர நலம் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப உத்திகளைக் கொண்டு அவற்றை சிறந்த முறையில் பேணிக்காப்பது குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக துணைவேந்தர் தாவர நலம், பாதுகாப்பான வர்த்தகம் மற்றும் கணினி தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு தலைப்புகளில் நடைபெற்ற சிறந்த புகைப்படம், சிறந்த ஓவியம் மற்றும் சிறந்த கட்டுரை எழுதிய பயிர் பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த முதுநிலை மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பன்னாட்டு வலைதள பயிலரங்கம் நடந்தன. அதில் முனைவர் B.M. பிரசன்னா தாவர நலம் இந்தியா போன்ற நாடுகளில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து கருத்துக்களை மாணவர்களோடு கலந்துரையாடினார். முனைவர் T.சோனை ராஜன் பாதுகாப்பான மற்றும் சரியான அளவு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வினை மாணவரிடம் எடுத்துரைத்தார். மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய இயக்குனர் முனைவர் Y.G.பிரசாத் அவர்கள் பேசுகையில் பருத்தியில் மேம்படுத்தப்பட்ட கணினி வகை தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து முனைவர் ஆலிஸ் சுஜிதா பேசுகையில் தாவரக் கட்டுப்பாடு விதிகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மா.முருகன் வரவேற்புரை ஆற்றினார். பயிர் நோயியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் K.அங்கப்பன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.



இந்நிகழ்ச்சியில் சுமார் 450க்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...