சிறுதுளி நிறுவனம் சார்பில் குனியமுத்தூர் ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணி தொடக்கம்

மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதியுடனும், நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சியின் ஆலோசனையின் அடிப்படையிலும் இன்று சிறுதுளியின் சார்பில் குனியமுத்தூர் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.


கோவை: சிறுதுளி நிறுவனம் 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கோயம்பத்தூரில் பல்வேறு மேம்பட்டுப்பணிகளை செய்து வருகின்றது. குறிப்பாக நீர் மேலாண்மை, பசுமை பாதுகாப்பு, விழிப்புணர்வு, கழிவுநீர் மேலாண்மை மற்றும் விவசாய மேம்பாடு போன்ற பல்வேறு மேம்பாடு திட்டங்கள் வாயிலாக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.



மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதியுடனும், நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சியின் ஆலோசனையின் அடிப்படையிலும் இன்று சிறுதுளியின் சார்பில் குனியமுத்தூர் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

இந்த ராஜவாய்க்கால் நொய்யலின் கீழ் சித்திரைசாவடி அணைக்கட்டில் இருந்து மழை நீரை சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், பேரூர் பெரிய குளம் மற்றும் குனியமுத்தூர் செங்குளத்திற்கு நீர் நிரப்பும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜவாய்க்காலில் முள் புதர், வண்டல் மண் படிந்துள்ளதால் மழை நீரை கொண்டு வர தடைகள் இருப்பதனால் விவசாயிகள் சிறுதுளியை கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் திட்டம் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...