சிறுதுளி நிறுவனம் சார்பில் குனியமுத்தூர் ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணி தொடக்கம்

மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதியுடனும், நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சியின் ஆலோசனையின் அடிப்படையிலும் இன்று சிறுதுளியின் சார்பில் குனியமுத்தூர் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.


கோவை: சிறுதுளி நிறுவனம் 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கோயம்பத்தூரில் பல்வேறு மேம்பட்டுப்பணிகளை செய்து வருகின்றது. குறிப்பாக நீர் மேலாண்மை, பசுமை பாதுகாப்பு, விழிப்புணர்வு, கழிவுநீர் மேலாண்மை மற்றும் விவசாய மேம்பாடு போன்ற பல்வேறு மேம்பாடு திட்டங்கள் வாயிலாக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.



மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதியுடனும், நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சியின் ஆலோசனையின் அடிப்படையிலும் இன்று சிறுதுளியின் சார்பில் குனியமுத்தூர் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

இந்த ராஜவாய்க்கால் நொய்யலின் கீழ் சித்திரைசாவடி அணைக்கட்டில் இருந்து மழை நீரை சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், பேரூர் பெரிய குளம் மற்றும் குனியமுத்தூர் செங்குளத்திற்கு நீர் நிரப்பும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜவாய்க்காலில் முள் புதர், வண்டல் மண் படிந்துள்ளதால் மழை நீரை கொண்டு வர தடைகள் இருப்பதனால் விவசாயிகள் சிறுதுளியை கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் திட்டம் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...