மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு

பில்லூர் அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்த தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அணை தூர்வாரும் பணியினை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மட்டுமின்றி திருப்பூர் மாவட்ட மக்களின் தாகத்தை தணிப்பதில் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள பில்லூர் அணை முக்கிய பங்கு வகிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையை நீர் ஆதாரமாக இந்த அணை கொண்டுள்ளது. தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக இந்த அணை வறண்டு காணப்படுகிறது.

100 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 60 அடிக்கு மேல் சகதி நிரம்பி காணப்படுகிறது. இந்த அணையை தூர்வார வேண்டும் என்று கோவை மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பில்லூர் அணையினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவர்கள் நேற்று (மே.10) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.



மேலும், அணையினை தூர்வாருதல் பணியினை துரிதப்படுத்தி முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொ) பிரேம்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செல்லமுத்து, கோவை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், கோவை மாநகராட்சி தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...