பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உள்புகார் குழு அமைக்காவிட்டால் ரூ.50,000 அபராதம் – கோவை ஆட்சியர் அறிவிப்பு

உள்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்களுக்கு பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013-ன்படி ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: வேலை செய்யும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்காக மத்திய அரசால், பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தடைச் சட்டம் 2013 நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உள்புகார் குழு அனைத்து அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு அமைக்கப்படும் குழுவின் தலைவராக பெண் அலுவலா் நியமிக்கப்பட வேண்டும்.இரண்டு நபா்களை உறுப்பினராகவும், இந்தத் துறையில் நன்கு பழக்கமான தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவரை உறுப்பினராக சோ்க்க வேண்டும் என்றும் விசாரணைக்கான வழிமுறைகள் குறித்தும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு அரசுத் துறைகள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், அரசுப் பயிற்சி நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், குறு, சிறு நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் என 10 பேருக்குமேல் பணியாற்றும் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களிலும் உடனடியாக உள்புகார் குழு அமைத்து அதன் விவரத்தை மாவட்ட சமூக நல அலுவலருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

உள்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்களுக்கு பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013-இன்படி ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.உள்புகார் குழு அமைத்த நிறுவனங்கள் மாதந்தோறும் பெற்ற புகார்கள் குறித்த அறிக்கையை மாவட்ட சமூகநல அலுவலா் அலுவலகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும்.மேலும், ஆண்டறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் மாத இறுதிக்குள் சமூக நல அலுவலா் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியா் கிரந்தி குமார் பாடி நேற்று தெரிவித்துள்ளார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...