பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உள்புகார் குழு அமைக்காவிட்டால் ரூ.50,000 அபராதம் – கோவை ஆட்சியர் அறிவிப்பு

உள்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்களுக்கு பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013-ன்படி ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: வேலை செய்யும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்காக மத்திய அரசால், பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தடைச் சட்டம் 2013 நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உள்புகார் குழு அனைத்து அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு அமைக்கப்படும் குழுவின் தலைவராக பெண் அலுவலா் நியமிக்கப்பட வேண்டும்.இரண்டு நபா்களை உறுப்பினராகவும், இந்தத் துறையில் நன்கு பழக்கமான தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவரை உறுப்பினராக சோ்க்க வேண்டும் என்றும் விசாரணைக்கான வழிமுறைகள் குறித்தும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு அரசுத் துறைகள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், அரசுப் பயிற்சி நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், குறு, சிறு நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் என 10 பேருக்குமேல் பணியாற்றும் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களிலும் உடனடியாக உள்புகார் குழு அமைத்து அதன் விவரத்தை மாவட்ட சமூக நல அலுவலருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

உள்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்களுக்கு பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013-இன்படி ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.உள்புகார் குழு அமைத்த நிறுவனங்கள் மாதந்தோறும் பெற்ற புகார்கள் குறித்த அறிக்கையை மாவட்ட சமூகநல அலுவலா் அலுவலகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும்.மேலும், ஆண்டறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் மாத இறுதிக்குள் சமூக நல அலுவலா் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியா் கிரந்தி குமார் பாடி நேற்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...