உடுமலையில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி துவக்கம் - 24 அணிகள் பங்கேற்பு

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் காந்திகிராமம் பல்கலைக்கழக அணியும், தாராபுரம் கூடைப்பந்து அணியும் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 80-82 என்ற புள்ளிகள் கணக்கில் காந்திகிராமம் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உடுமலை கூடைப்பந்து அகடாமி சார்பில் மாநில அளவிலான கூடை பந்து போட்டி இன்று துவங்கியது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் காந்திகிராமம் பல்கலைக்கழக அணியும், தாராபுரம் கூடைப்பந்து அணியும் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 80-82 என்ற புள்ளிகள் கணக்கில் காந்திகிராமம் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.



இரண்டாவது போட்டியில் கொங்குநாடு கூடைப்பந்து அணியும், பொள்ளாச்சி கூடை பந்து அணியும் மோதின. இதில், 51- 61 என்ற புள்ளி கணக்கில் பொள்ளாச்சி கூடைப்பந்து கழகம் அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ராயல் கூடை பந்து கழகம் அணியும் வத்தலகுண்டு கூடை பந்து அணியும் மோதியது.

இதில் 76 -67 என்ற புள்ளி கணக்கில் ராயல் கூடை பந்து கழகம் அபார வெற்றி பெற்றது முதல் நாள் துவக்க விழா போட்டிகளில் திருப்பூர் மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் ரகுகுமார், யூகேபி முத்துக்குமாரசாமி, ஆர்.விஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி ஜூலியா சந்தோஷ், உடுமலை மார்டூரி வசந்தகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், உடுமலை கூடைப்பந்து கழகம் விஜயபாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...