உடுமலையில் 257 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன்

பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, கண்காணிப்புக் கேமரா, ஜிபிஎஸ் போன்ற பாதுகாப்பு சாதனங்களின் செயல்பாடுகள் பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் செயல்பட்டு வரும் 29 தனியார் பள்ளிகளில் 257 வாகனங்கள் உடுமலை நேதாஜி மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டன.



அந்த வாகனங்களை உடுமலை ஆர்.டி.ஒ. ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.



ஆய்வின் போது பள்ளி பேருந்துகளின் படிக்கட்டுகள், தளம் மற்றும் இருக்கைகளின் உறுதித் தன்மை குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.



மேலும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, கண்காணிப்புக் கேமரா, ஜிபிஎஸ் போன்ற பாதுகாப்பு சாதனங்களின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்யப்பட்டது.



மேலும் விபத்துக் காலத்தில் உதவும் வகையில் முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு சாதனம் மற்றும் அவசர வழி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.



மேலும் வாகனங்கள் முன்புறம் பின்புறம் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா எனவும் ஆய்வும் மேற்கொண்டனர்.



பின்னர் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர், போக்குவரத்து அலுவலர் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் உட்பட பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். இந்த ஆய்வின் முடிவில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் குறைபாடுகள் இருந்த வாகனங்கள் கண்டறியபட்டு அந்த குறைபாடுகளை சரி செய்து தகுதிச் சான்று பெரும் வரை பேருந்து இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.



இந்த ஆய்வின் போது உடுமலை தீயணைப்பு அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விபத்துக் காலத்தில் மீட்புப்பணிகள் மேற்கொள்ளும் வழிமுறைகள், தீ விபத்தின் போது செயல்பட வேண்டிய முறைகள் குறித்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சியளித்தனர்.

ஆய்வின் போது உடுமலை டிஸ்பி சுகுமாரன், வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர்கள் அருணாச்சலம் மற்றும் தனியார் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...