உடுமலையில் 257 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன்

பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, கண்காணிப்புக் கேமரா, ஜிபிஎஸ் போன்ற பாதுகாப்பு சாதனங்களின் செயல்பாடுகள் பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் செயல்பட்டு வரும் 29 தனியார் பள்ளிகளில் 257 வாகனங்கள் உடுமலை நேதாஜி மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டன.



அந்த வாகனங்களை உடுமலை ஆர்.டி.ஒ. ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.



ஆய்வின் போது பள்ளி பேருந்துகளின் படிக்கட்டுகள், தளம் மற்றும் இருக்கைகளின் உறுதித் தன்மை குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.



மேலும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, கண்காணிப்புக் கேமரா, ஜிபிஎஸ் போன்ற பாதுகாப்பு சாதனங்களின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்யப்பட்டது.



மேலும் விபத்துக் காலத்தில் உதவும் வகையில் முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு சாதனம் மற்றும் அவசர வழி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.



மேலும் வாகனங்கள் முன்புறம் பின்புறம் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா எனவும் ஆய்வும் மேற்கொண்டனர்.



பின்னர் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர், போக்குவரத்து அலுவலர் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் உட்பட பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். இந்த ஆய்வின் முடிவில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் குறைபாடுகள் இருந்த வாகனங்கள் கண்டறியபட்டு அந்த குறைபாடுகளை சரி செய்து தகுதிச் சான்று பெரும் வரை பேருந்து இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.



இந்த ஆய்வின் போது உடுமலை தீயணைப்பு அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விபத்துக் காலத்தில் மீட்புப்பணிகள் மேற்கொள்ளும் வழிமுறைகள், தீ விபத்தின் போது செயல்பட வேண்டிய முறைகள் குறித்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சியளித்தனர்.

ஆய்வின் போது உடுமலை டிஸ்பி சுகுமாரன், வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர்கள் அருணாச்சலம் மற்றும் தனியார் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...