மாங்கரை ஓடைப் பகுதியில் யானை உயிரிழப்பு - காரணம் குறித்து வனத்துறையினர் ஆய்வு

மருத்துவக் குழுவினர் நடத்திய ஆய்வில் நுரையீரல் பாதிப்பால் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நுரையீரல் பாதிப்பால், மற்ற உள் உறுப்புகளும் பாதிப்படைந்து யானை உயிரிழந்துள்ளது.


கோவை: கோவை வனத்துறையினர் நேற்று மே.7 காலை மாங்கரை பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் அருகே உள்ள மாங்கரை சரக வனப்பகுதியில் வனத்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது வனப்பகுதிக்கு வெளியே வனப்பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள வனத்திற்குள் இருந்து வருகின்ற மாங்கரை ஓடை பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். பின்னர், இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வனச்சரகர் திருமுகன் மற்றும் வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அதில், உயிரிழந்தது 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, உயிரிழந்த யானையின் உடலை மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். அதில், யானை நுரையீரல் நோயால் பாதிப்படைந்தது தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "உயிரிழந்த யானையின் உடலை வனத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.

யானையின் நுரையீரல் பாதிப்பால், அதன் மற்ற உள் உறுப்புகளும் பாதிப்படைந்ததில் யானை உயிரிழந்துள்ளது. மேலும், யானையின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவிற்கு பிறகு தான் யானையின் உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தெரியவரும் என வனத்துறையினர் கூறினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...