தாராபுரம் அருகே கோவிலுக்கு சென்ற டாட்டா ஏஸ் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் படுகாயம் - மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு

மூலனூர் அருகே பட்டுத்துறை என்ற இடத்தில் உள்ள மலையாள கருப்பண்ணசாமி கோவில் விழாவிற்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி 19 பேர் காயமடைந்தனர். மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூரை அடுத்த துலுக்கவலசு அருகே கட்டுப்பாட்டை இழந்த டாட்டா ஏஸ் வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.



மூலனூர் அருகே உள்ள பட்டுத்துறை என்ற இடத்தில் மலையாள கருப்பண்ணசாமி கோவில் விசேஷத்திற்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டாட்டா ஏஸ் வாகனத்தில் கோவிலுக்கு வந்து கொண்டிருந்த வழியில் எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் (56), ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சத்யா (14), அதே பகுதியைச் சேர்ந்த மணிமேகலை (35,) நாகரத்தினம் மார்க்கம்பட்டி, மாரியம்மாள் (36), செல்வபிரியா (13), ஈஸ்வரி வயது 39, மற்றொரு ஈஸ்வரி வயது 30, பொட்டியம்மாள் (55) இறந்தவர், லட்சுமி வயது 47, சுப்பிரமணி 60, பழனியம்மாள் (70) ஆகியோர் காயம் அடைந்தனர்.



காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 12-நபர்களை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், மீதமுள்ள 8- நபர்களை வெள்ளகோவில் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மூலனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...