கோவை கிராமப்பகுதியில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோவை மாவட்டம் சோமனூர் அருகேயுள்ள இராமாச்சிபாளையம் பகுதியில் புதிதாக மதுபானக்கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து, கிராமப்பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகாமையில் மதுபானக்கடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், இராமாச்சிபாளையம் பகுதியில் உள்ள கோவை- சூலூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த மறியலின் போது, மதுபானக்கடை அமையவுள்ள சாலையில் பள்ளிகள் மற்றும் கோவில்கள் இருப்பதால் அவ்வழியே செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் எனவும், குடியிருப்புகளுக்கு அருகே மதுபானக்கடை அமைக்கப்பட்டால் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறிய பொதுமக்கள், அப்பகுதியில் புதிதாக மதுபானக்கடை அமைக்க கூடாது என வலியுறுத்தினர்.

இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தி மதுபானக்கடை அமைக்கப்படாது என உத்திரவாதம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல் துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த போராட்டம் காரணமாக கோவை- சூலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

முன்னதாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கோவை மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை கிராமப்பகுதிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...