கோவை மத்தியசிறையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100 சதவீதம் தேர்ச்சி..!

கோவை மத்தியசிறையில் அனுமதிக்கப்பட்ட சிறைவாசிகள் கல்வி மற்றும் மறு வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டு, 12ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Coimbatore: கோவை மத்தியசிறையில் தற்போது சுமார் 2300 சிறைவாசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான யோகா, கல்வி, தொழிற்கல்வி போன்ற பல்வேறு மறுவாழ்வுப் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. 2023 - 2024 கல்வியாண்டில் 12 வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதிய 21 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

தண்டனை சிறைவாசிகள் சுப்புராஜ், மன்சூர் அகமது மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் குறிப்பிடத்தக்க மதிப்பெண்களை பெற்று தலைசிறந்த தேர்வு முடிவுகளை பதிவு செய்துள்ளனர். சிறை கண்காணிப்பாளர் ம். செந்தில்குமார் தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து கூறியுள்ளார். கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் அவர்களும் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் வழங்கினார்.

Newsletter

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...