உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 49 வது பட்டமேற்பு விழா

பட்டமேற்பு விழாவில் பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளநிலை மாணவ, மாணவிகள் 657 பேர், முதுநிலை பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 139 பேர் என மொத்தம் 796 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 49 ஆவது பட்டமேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினரை அவைக்கு அறிமுகம் செய்து வைத்து பேசியதோடு கல்லூரி ஆண்டறிக்கையையும் வாசித்தார்.பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளநிலை மாணவ, மாணவிகள் 657 பேர், முதுநிலை பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 139 பேர் என மொத்தம் 796 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராக கோவை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் முனைவர் வெ.கலைச்செல்வி கலந்துகொண்டு பட்டமேற்பு விழாப் பேருரை நிகழ்த்தி, பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.



அவர்தம் உரையில் , "வாழ்க்கையில் நம்மை நாம் நேசித்தால் மட்டுமே நாம் மற்றவர்களை நேசிக்க முடியும். இந்த பட்டப் பேற்றினைப் பெற்று உச்சம் தொடுவதற்குக் காரணமாகத் திகழ்ந்த, இரத்தத்தையும் வியர்வையையும் சிந்திய பெற்றோர்களை நன்றியோடு நினைத்துப் பாருங்கள்.



நம் உயர்விற்கு நாமே பொறுப்பு, அதே வேளை நாம் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது. அப்படி யாரையும் சார்ந்திராமல் தன்னிறைவோடு வாழ வேண்டுமென்றால் புத்தகத்தை நேசியுங்கள், புத்தகங்கள் மிகச் சிறந்த நண்பர்கள், நீங்கள் படிக்கும் புத்தகம் தான் பரந்துபட்ட இந்த உலகத்தையும், மாறுபட்ட நம்பிக்கையையும் எதிர்காலத்தில் நீங்கள் அமர வேண்டிய இடத்தையும் தீர்மானிக்கும்.



மனிதர்களை எளிதில் அறிந்துகொள்ள மனிதர் மனங்களில் ஒளிந்து இருக்கின்ற எண்ணங்களை அறிந்து கொள்ள வாழ்க்கைப் பாதையில் பயணிக்க புத்தகங்களே நமக்கு உறுதுணையாக அமைகின்றன.

மாணவர்களே,பன்மொழி ஆற்றல் பெற்றவர்களாக தன்னைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களிடமிருந்து நீங்கள் வித்தியாசப்பட்டு இருந்தால்தான் நம்மை உலகம் வித்தியாசப்படுத்தி வியந்து பார்க்கும். மற்றவர்களால் தவிர்க்க முடியாத சக்தியாக உங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

உங்கள் பலம், பலவீனத்தைப் பட்டியலிட்டு பலவீனத்தைப் பலமாக மாற்றிக் கொள்ள வேண்டும். சோம்பேறித்தனத்தை ஒழித்து, உழைக்க வேண்டும். செல்லும் பாதை கல்லும் கரடுமாக இருப்பதைப் போல் தோன்றலாம். ஆனால் அப்பாதையை மென் மலர்ப்பாதையாக மாற்றுவது அவரவர் கைகளிலேயே உள்ளது.



வாழ்வதற்கு ஆயிரம் வாய்ப்புகள் உள்ளன. ஆசைப்பட்டதை இந்தப் பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும். அதற்கு நீங்கள் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்.

இந்தப் பிரபஞ்சம் உங்கள் வசப்பட வேண்டுமென்றால், முடியாது என்பதை முடித்துக் காட்ட எனக்கான வாய்ப்பினை நான் உருவாக்கிக் கொள்வேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேசினார்.

நிறைவாக பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 11 மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வினை வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.சிவக்குமார் ஒருங்கிணைத்தார்.

Newsletter

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...