முத்தூர் அருகே திருமணம் செய்து வைக்கச்சொல்லி போதையில் தாத்தாவை அடித்து கொலை செய்த பேரன் கைது

குடி போதைக்கு அடிமையான அருண் குமார் என்ற இளைஞர் திருமணம் ஆன பெண்ணுடன் திருமணம் செய்து வைக்குமாறு அவருடைய தாத்தா உடன் போதையில் தகராறு செய்துள்ளார். பின்னர் கைத்தடியை பிடுங்கி அடித்ததில், கீழே விழுந்த முதியவர் உயிரிழந்துவிட்டார்.


திருப்பூர்: காங்கேயம் அடுத்துள்ள முத்தூர் நகரையூரை சேர்ந்தவர் முனியப்பன் இவருடைய மகன் சேமலைக்கு திருமணம் ஆகி அருண்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி வெவ்வேறு நபர்களை திருமணம் செய்துகொண்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய மகன் அருண்குமாரை தாத்தா முனியப்பன் உடன் வாழ்ந்துவந்துள்ளார். மேலும் அருண்குமார் வெங்காய மண்டியில் வேலை செய்து வந்ததாகவும் தெரியவருகின்றது.

மேலும் அருண்குமார் நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சில நாட்களாக மலையத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆனா பெண்ணை காதலிப்பதாகவும், இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாத்தா முனியப்பன் மற்றும் பேரன் அருண்குமாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் மலை போதையில் வந்த பேரன் அருண்குமார் நான் காதலிக்கும் பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கச்சொல்லி தாத்தாவிடம் சண்டையிட்டுள்ளான். பின்னர் நீ உயிருடன் இருந்தால் நான் அவளுடன் சேர்ந்து வாழமுடியாது என கூறி ஆத்திரம் அடைந்த அருண்குமார் முதியவர் வைத்திருந்த கைத்தடியை பிடிங்கி அவரை சரமாரிய தங்கியுள்ளான்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முனியப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த இரண்டு பெண்கள் காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி முதியவர் முனியப்பன் பலியானார். இதை அடுத்து வெள்ளகோவில் காவல் ஆய்வாளர் செல்வி உதவி ஆய்வாளர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து முனியப்பனை தாக்கி கொலைசெய்த பேரன் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கணவன் மனைவி விட்டு சென்ற பேரனை பாசத்தோடு வளர்த்திய தாத்தாவுக்கு பேரன் வழங்கிய நன்றி கடன் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சொந்த தாத்தாவையே பேரன் கொலை செய்தது முத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...