கோவை மாவட்ட திமுக சார்பில் மே தின விழா கொண்டாட்டம் - ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., முத்தமிழறிஞர் கலைஞரின் சிலைக்கு மாலை மரியாதை செலுத்தினார். பின்னர், ஆட்டோ தொழிலாளர்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கோவை: கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் இன்று மே.1 உழைப்பாளர் தின விழா கொண்டாடப்பட்டது.



இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., முத்தமிழறிஞர் செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். பின்னர் 200 க்கும் மேற்பட்ட‌ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகர் மாவட்ட திமுக பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், LPF ஆட்டோ தொழிற்சங்க பொதுச் செயலாளர் ப.வணங்காமுடி,மாநகர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எஸ்.ஜெயக்குமார், மாநகர் மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டெம்போ சிவா, மாநகர் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கராத்தே அர்ஜூனன், LPF ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பூபதி, C.செல்வன், கார்த்திகேயன், வட்டக் கழகச் செயலாளர்கள் கே.ராமநாதன், எஸ்.போஸ், டவுன் பா.ஆனந்தன், சாரமேடு இஸ்மாயில், கேசவன் ex.mc, கழக நிர்வாகிகள், LPF தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...