உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் பணம் எண்ணிக்கை - ரூ.15 லட்சத்து 17 ஆயிரத்து 518 வசூல்

மாரியம்மன் கோவிலில் நிரந்தர மற்றும் தற்காலிக உண்டியல்கள் என மொத்தம் 15 உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் எண்ணப்பட்டது. இதில், மொத்தம் 15 லட்சத்து 17 ஆயிரத்து 518 ரூபாய் வசூல் ஆகியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் விநாயகர், முருகன், மாரியம்மன் தனி தனி சன்னதிகளிலும் அஷ்டதிக் நாகர்கள் அரச மரத்தின் கீழ் எழுந்தருளியும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாரியம்மன் உள்ளிட்ட கடவுள்களை சாமி தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வருகை தருகின்ற பக்தர்கள் நேர்த்தி கடனாகவும், காணிக்கையாகவும் அங்கு நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள 4 உண்டியல்களில் ரூபாய் நோட்டுகள், தங்கம், வெள்ளி மற்றும் நாணயங்களை செலுத்தி வருகின்றனர்.



அத்துடன் நடைபெற்று முடிவடைந்த தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு ஏதுவாக கோவில் வளாகத்தில் நிர்வாகத்தின் சார்பில் 11 தற்காலிக உண்டியல்கள் நிறுவப்பட்டிருந்தது. இந்த உண்டியல்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் இன்று திறக்கப்பட்டு என்னப்பட்டது. அந்த வகையில் நிரந்தர மற்றும் தற்காலிக உண்டியல் உட்பட 15 உண்டியல் திறக்கப்பட்டு அதில் சேகரிப்பட்ட காணிக்கைகள் கோவில் வளாகத்தில் வைத்து எண்ணப்பட்டது. அதன்படி நிரந்தர உண்டியல்கள் மூலமாக ரூ.11லட்சத்து 1 ஆயிரத்து 225 ரூபாயும், தங்கம் 55.77 கிராமும், வெள்ளி 120.38 கிராமும் வசூலானது. அதே போன்று திருவிழா தற்காலிக உண்டியல்கள் மூலம் ரூ.4லட்சத்து16 ஆயிரத்து 518 ம் வசூலானது. ஆக மொத்தம் ரூ. 15 லட்சத்து 17 ஆயிரத்து 518 வசூலானது.



இந்த நிகழ்வில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், இந்து சமய அறநிலைத்துறை மடத்துக்குளம் ஆய்வாளர் சரவணக்குமார், கோவில் செயல் அலுவலர் சி.தீபா, குமரேசன் உள்ளிட்ட பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...