உடுமலை அருகே முறையான குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

முறையான குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாழ்வு சரி செய்து மூங்கில்தொழவு கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யபடும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் தற்காலிகமாக மறியலை மக்கள் கைவிட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மூங்கில் தொழவு ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையில் மூங்கில் தொழுவு கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் வாழ்வு பகுதி பெதம்பம்பட்டியில் உடைந்த உள்ள காரணத்தால் தண்ணீர் முறையாக மூங்கீல் தொழவு கிராமத்தக்கு வருவதில்லை என பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் தெரிவித்து எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்த நிலையில் இன்று ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்துக்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் வாழ்வு உடனே சரி செய்து மூங்கில்தொழவு கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யபடும் என உறுதி கொடுக்கப்பட்டதால் தற்காலிகமாக பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

உடுமலை அருகே கிராம மக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...