கோவை மக்களவைத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோதே ஏன் ஆட்சேபனம் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சுதந்திர கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.


கோவை: கோவை பாராளுமன்ற தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். அதேபோல அவருக்கு ஆதரவாக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு தேர்தல் முடிந்த பின்னர் இதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஸ்திரேலியாவில் பணியாற்றக்கூடிய கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மக்களவை தேர்தலில் வாக்களிக்க அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து கோவை வந்ததாகவும், வாக்களர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் கூறியிருந்தார்.

கடந்த 2019 மக்களவை தேர்தலிலும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை தனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதே முகவரியில் வசிக்கும் தனது மகள் பெயர் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதேபோல், தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூடியிருந்தார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15ம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், அதுவரை கோவை மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு சுதந்திர கண்ணன் தரப்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கை இன்று (30.04.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் அளித்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் அமர்வு முன்னிலையில் இன்று ஏப்ரல்.30 விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகினார். அவர் கடந்த ஜனவரி மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் அவர் பெயர் இடம் பெறவில்லை. மனுதாரர் தொகுதியில் வசிக்காமல் ஆஸ்திரேலியாவில் வசித்ததாகவும், அவர் தெரிவித்திருந்தார். இதை அடுத்து ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் விடுபட்டிருக்கும் போது ஏன் ஆட்சேபனம் தெரிவிக்கவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் படிவம் 6-ரை ஏன் பயன்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோதே ஆட்சேபனம் தெரிவித்திருக்க வேண்டும் எனக்கு கூறி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...