உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா - இரவை பகலாக்கிய வானவேடிக்கை நிகழ்ச்சி

மாகாளியம்மன் சிம்ம வாகனத்திலும், மாரியம்மன் சூலத்தேவருடன் குதிரை வாகனத்திலும் பரிவேட்டைக்கு எழுந்தருளினர். அப்போது நடைபெற்ற ஊர்வலத்தின் போது நிகழ்த்தப்பட்ட வானவேடிக்கை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த 25ம் தேதி நடைபெற்றது.



இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு அம்மன் பரிவட்டைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து குட்டை திடலில் வான வேடிக்கையும் நடைபெற்றது. முன்னதாக மாரியம்மன் சூலத்தேவர் மாகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து மாகாளியம்மன் சிம்ம வாகனத்திலும் மாரியம்மன் சூலத்தேவருடன் குதிரை வாகனத்திலும் பரிவேட்டைக்கு எழுந்தருளினார்கள். கோவில் வளாகத்தில் தொடங்கி உடுமலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் குட்டை திடலை அடைந்தது.



அதைத் தொடர்ந்து அம்மன் முன்பாக வான வேடிக்கை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. அங்கு தயார் நிலையில் இருந்த வெடிகள் விதவிதமான வண்ணங்களில் வெவ்வேறான ஓசையுடன் வெடித்து சிதறியது.



இதை பொதுமக்கள் நேரிலும், வீடுகளின் மொட்டை மாடிகளில் நின்றும் ஆர்வத்தோடு கண்டு களித்தனர். மேலும் கண்கவர் பல ரகங்களில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள் இரவை பகல் ஆக்கியது. வான வேடிக்கை நிகழ்வையொட்டி உடுமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...