பெருமாநல்லூர் நால் ரோட்டில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் பொள்ளாச்சி V.ஜெயராமன் எம்எல்ஏ

பெருமாநல்லூர் நால் ரோட்டில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அதிமுக சார்பாக இலவச நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி.V.ஜெயராமன் திறந்து வைத்தார்.


திருப்பூர்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்புப்படி, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி, திருப்பூர் ஒன்றிய கழகத்தின் சார்பில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான K.N.விஜயகுமார் தலைமையில், பெருமாநல்லூர் நால் ரோட்டில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அதிமுக சார்பாக இலவச நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர், கழகத் தேர்தல் பிரிவு செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் பொள்ளாச்சி V.ஜெயராமன் இன்று (ஏப்ரல்.26) திறந்து வைத்தார்.



பின்னர் பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவைகளை வழங்கினார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...