உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வண்ண துணிகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட தேரானது மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து யானையின் உதவியுடன் தொடங்கியது. விழாவில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அதிகளவில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த ஏப்ரல் 9 ம்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் கம்பம் போடுதல் கொடியேற்றம் நிகழ்ச்சி, தினமும் முக்கிய வீதியில் அம்மன் திருவீதி உலா, திருக்கல்யாணம், மாவிளக்கு பூவோடு எடுத்தல் உடம்பில் கத்தி போட்டு நூதன வழிபாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.



இந்நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.



ஒன்பது நிலைகளுடன் கூடிய திருத்தேர் அலங்கரிக்கப்பட்ட கலசம் ஏற்றப்பட்டு வண்ண துணிகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட தேரானது மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து கேரளாவில் இருந்த வந்த சாது( 57) என்ற ஆண் யானையின் உதவியால் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களால் வடம் பிடித்து துவங்கிய தேர் பழனி சாலை, தளி ரோடு, குட்டை திடல் தலைகொண்ட அம்மன் கோவில்வீதி, கொல்லம்பட்டறை வழியாக வந்து மாரியம்மன்கோவிலை அடைந்தது.



தேர்திருவிழாவில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அதிகளவில் வருகை அம்மனை தரிசனம் செய்தனர்.



உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உடுமலை-பழனி, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...