உடுமலை அருகே தமிழக கேரள எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

உடுமலை அருகே தமிழக கேரளா எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனை சுவாடி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


திருப்பூர்: கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பண்ணைகளில் பராமரிக்கப்பட்டு வந்த வாத்து, கோழிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொத்து கொத்தாக இறந்தன. அதைத் தொடர்ந்து வாத்துகளை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் தாக்குதல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தமிழக - கேரளா எல்லைகளில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டு உள்ளது.



கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர், இரண்டு கால்நடை பராமரிப்பு உதவியாளர் அடங்கிய குழுவினர் மூன்று குழுக்களாக சுழற்சி முறையில் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களின் சக்கரங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் கோழி இறைச்சி, முட்டை, கோழி தீவனம் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கோழி பண்ணைகளில் கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது எதிர்பாராமல் அதிக அளவு கோழிகள் இறந்தால் உடனடியாக கால்நடை துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பண்ணையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த சோதனையானது பறவை காய்ச்சல் நோய் கட்டுக்குள் வரும் வரை மேற்கொள்ளப்படும் என்று கால்நடை துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில் இந்த பணிகளை திருப்பூர் மண்டல கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் புகழேந்தி ஆய்வு செய்தார். உடன் உடுமலை உதவி இயக்குனர் ஜெயராம், கால்நடை மருத்துவர்கள் ராஜ சொக்கப்பன், அப்துல் கலாம் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...