துறையூர் அருகே சாலை விரிவாக்கத்தின் போது குடிநீர் குழாய் உடைப்பு -ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் விரயம்

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சாலை பணி வரிவாக்கத்தின்போது, குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் அதிக அளவு விரயமானது பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த துறையூர் பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கத்திற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை பணியின் போது நேற்று மாலை கம்பாலப்பட்டி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் விரையமானது.



இந்த கம்பாலபட்டி கூட்டு குடிநீர் மூலம் சமத்தூர் மற்றும் கோட்டூர் பேரூராட்சிகள், எஸ்.நல்லூர், ஜல்லிப்பட்டி, கரியான்செட்டிபாளையம், கம்பாலபட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர் குழாய் உடைந்து பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் அதிக அளவு விரயமானது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...