கோவையில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவது குறித்து ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக வழங்கப்படும் குடிநீர் திட்டங்களின்படி, அனைத்து திட்டங்களிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் கடைக்கோடி குடியிருப்புகள் வரை, சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்திட வேண்டும் என்று கோவை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவது குறித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகளுடன், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று (ஏப்ரல்.22) நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலகண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கோவிந்தன், பண்டரிநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நீர்வளத்துறை, மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக வழங்கப்படும் குடிநீர் திட்டங்களின்படி, அனைத்து திட்டங்களிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் கடைக்கோடி குடியிருப்புகள் வரை, சென்றடைவதை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த உள்ளாட்சி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

பராமரிப்புத் திட்டத்தில் உள்ள குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள் மற்றும் மின் மோட்டாரில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் தொய்வின்றி கிடைக்கவும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். தினசரி வரையறுக்கப்பட்ட குடிநீர் ஊரகக் குடியிருப்புகளுக்கும், நகரங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறதா என்பதை உறுதி செய்யவும், தங்கள் பகுதிகளின் குடிநீர் தேவைகள் தொடர்பாக, மாநகராட்சி உதவி ஆணையர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு மழை குறைந்த அளவில் பெய்துள்ளது. தற்போது கோடைகாலமாக இருப்பதால், பொதுமக்களுக்கு, நீரின் தேவையை உணர்த்தி சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், நீரின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தேவைக்கு அதிகமாக தண்ணீரை பயன்படுத்தாமல், சிக்கனமாக குடிநீரை பயன்படுத்த வேண்டும் என ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...