கூடுதல் தண்ணீர் திறக்கக்கோரி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட கால்வாய் மதகுகள் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்

கூடுதலாக இரண்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக் கூறி பொள்ளாச்சி அருகே குண்டலப்பட்டியில் உள்ள தொண்டாமுத்தூர் கிளை கால்வாய் மதகுகள் மேல் ஏறி நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பரம்பிகுளம் ஆழியார் பாசனத் திட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசனத்தில் இரண்டாவது சுற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் கிளை கால்வாய் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது தொண்டாமுத்தூர் கிளை கால்வாய்க்கு ஐந்து நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக இரண்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக் கூறி இன்று பொள்ளாச்சி அருகே குண்டலப்பட்டியில் உள்ள தொண்டாமுத்தூர் கிளை கால்வாய் மதகுகள் மேல் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏறி நின்று கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் தண்ணீர் திறந்து விடக் கூறி கோஷங்களும் எழுப்பினர். தற்போது மழை இல்லாமல் வறட்சியாக இருப்பதால் தென்னை மரங்கள் காய்ந்து வருவதாகவும், தற்போது திறந்துவிடபட்ட தண்ணீர் மூலம் கடைமடை விவசாயிகள் வரை பயன் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மேலும் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதிகாரிகள் இதுவரை வராததாது கவலை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...