திருப்பூரில் பேருந்துகளை சிறைப்பிடித்த பொதுமக்கள் – போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரம்

திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்துகளை சிறைப்பிடித்த பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல போதுமான அளவு பேருந்துகள் இயக்கவில்லை என குற்றம் சாட்டி கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பேருந்துகளை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் நடைபெற உள்ளது. 100% அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருப்பூரில் பணிபுரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டி கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்திற்கு படை எடுத்தனர்.

இருப்பினும் திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, பேருந்துகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்துகளில் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மூச்சு விடுவதற்கு கூட இடமில்லாமல் இடிபாடுகளுக்குள் சிக்கி பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...