திருப்பூரில் பேருந்துகளை சிறைப்பிடித்த பொதுமக்கள் – போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரம்

திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்துகளை சிறைப்பிடித்த பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல போதுமான அளவு பேருந்துகள் இயக்கவில்லை என குற்றம் சாட்டி கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பேருந்துகளை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் நடைபெற உள்ளது. 100% அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருப்பூரில் பணிபுரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டி கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்திற்கு படை எடுத்தனர்.

இருப்பினும் திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, பேருந்துகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்துகளில் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மூச்சு விடுவதற்கு கூட இடமில்லாமல் இடிபாடுகளுக்குள் சிக்கி பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...