உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில் சாலையோரம் திடீர் தீ விபத்து - புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

சாலையோரம் இருந்த புற்களில் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் அரைமணி நேரம் போராடி தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கலக்குறிச்சி கிராமம் உடுமலை மூணாறு சாலையில் உள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் இன்று சாலையோரம் அதிக அளவு புற்கள் இருந்த நிலையில் இன்று எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் அதிக அளவு புகைமூட்டம் இருந்த காரணத்தால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் கடும் பாதிப்படைந்தனர்.



இதற்கிடையில் தீ விபத்து குறித்து உடுமலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் உடுமலை தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தண்ணீரை ஊற்றி தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...