கோழிகமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த 70 வயதான சாரதா என்ற யானை உயிரிழப்பு

உடல்நலம் குன்றி காணப்பட்ட 70 வயதான சாரதா என்ற பெண் யானை, மருத்துவ சிகிச்சை பலனின்றி கடந்த 17 ஆம் தேதி இரவு உயிரிழந்தது. யானையின் உடலை இன்று காலையில் வனக் கால்நடை மருத்துவக் குழுவினர் உடற்கூறு செய்தனர்.



கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சிக் கோட்டம் உலாந்தி வனச்சரகம், கோழிகமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சாரதா (வயது 70) என்ற பெண் யானை கடந்த 17ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



கடந்த 16ஆம் தேதி முதல் உடல்நிலை குன்றிய நிலையில் காணப்பட்ட யானைக்கு உதவி வனக் கால்நடை மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும், 17ஆம் தேதி இரவு 9:45 மணிக்கு அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து, இன்று காலை கால்நடை மருத்துவக் குழுவினரால் உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...