பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1,701 வாக்கு சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

வாக்கு பதிவு இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல், மை, பேனா, பென்சில், சீல் அரக்கு உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள், முதியவர்கள் வாக்கு அளிக்க வசதியாக சக்கர நாற்காலிகள் என ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் தேவையான அனைத்தும் உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.


கோவை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு இயந்திரங்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.



தொடர்ச்சியாக கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வாக்கு பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நாளை பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு 6 சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 1,701 வாக்கு சாவடிகளில் நடைபெற உள்ள நிலையில் இன்று வாக்கு பெட்டி இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தீவிர பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த வாக்கு பதிவு இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல், மை, பேனா, பென்சில், சீல் அரக்கு உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் மாற்று திறனாளிகள், முதியவர்கள் வாக்கு அளிக்க வசதியாக சக்கர நாற்காலிகள் என ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் தேவையான அனைத்தும் உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...