கோவை - குருவாயூர் இடையே இயங்கி வந்த அரசு பேருந்து சேவை நிறுத்தம் என தகவல்

மார்ச் மாதம் 13 ஆம் தேதி துவங்கிய பேருந்து சேவை ஏப்ரல் 8 ஆம் தேதி வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சேவை தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கேரளா போக்குவரத்து துறை சார்பில் குருவாயூரில் இருந்து கோவைக்கு சமீபத்தில் துவங்கப்பட்ட பேருந்து சேவை முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது என நேற்று (ஏப்ரல்.17) தகவல் வெளியாகியுள்ளது.மார்ச் மாதம் 13 ஆம் தேதி துவங்கிய இந்த பேருந்து சேவை ஏப்ரல் 8 ஆம் தேதி வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சேவை தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு சில தனியார் பேருந்து நிறுவனங்களின் சதியே காரணம் என கொழிஞ்சாம்பாறை பேருந்து பயணிகள் சங்கம் குற்றம் சாடியதுடன், கேரள போக்குவரத்து அமைச்சர், கேரளா போக்குவரத்து துறையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை இயக்க மேலாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளது.இதற்கு இந்த சேவை மூலம் எதிர்பார்த்த வருமானம் வராமல் போனது ஒரு காரணமாக இருக்கலாம் என கேரள போக்குவரத்து துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...