கோவில்பாளையம் அக்ரஹார சாமக்குளத்திற்கு மேலும் 2 புதிய நீர்வழிப்பாதைகள் கண்டுபிடிப்பு

மழைநீர் வரும் பாதைகளில் இயந்திரங்களைக் கொண்டு குப்பை, மண்மேடு, புதர்கள் ஆகியவற்றை தன்னார்வலர்கள் அகற்றினர். இதனால் தற்போது அக்ரஹார சாமக்குளத்திற்கு 7 நீர்வழிப்பாதைகள் உள்ளன.


கோவை: கோவை, கோவில்பாளையம் அருகே 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட அக்ரஹார சாமக்குளம் ஏரி, கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு சார்பில் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த 5 நீர் வழிப்பாதைகள் வழியாக ஏரிக்கு மழை நீர் வரும் நிலையில், மேலும் 2 நீர் வழிப்பாதைகள் இருப்பது ஆய்வில் தெரிந்தது.

இதனையடுத்து இன்று ஏப்ரல்.16 அப்பாதைகளில் இயந்திரங்களைக் கொண்டு குப்பை, மண்மேடு, புதர்கள் ஆகியவற்றை தன்னார்வலர்கள் அகற்றினர். இதனால் தற்போது அக்ரஹார சாமக்குளத்திற்கு 7 நீர்வழிப்பாதைகள் உள்ளன.

இதனால் இனி வரும் காலங்களில் இக்குளத்திற்கு எளிதில் நீர் நிரம்ப வாய்ப்புள்ளதால், அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், தன்னார்வலர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தொடர்ந்து குளம் சீரமைப்பு பணியினை மேற்கொள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...