மோடி வந்தால் மீண்டும் தேர்தல் வராது – அலங்கியத்தில் சுப.வீரபாண்டியன் பேச்சு

விளங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற விஜயதாரணி, நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது அவருக்கு நாடாளுமன்ற தொகுதி கொடுக்கப்படவில்லை என்பதால் அவர் ஏமாந்து போய் உள்ளார் என்று சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் கிராமத்தில், இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் திமுக ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து அலங்கியத்தில் திராவிட கழகத்தின் தலைவர் சுப. வீரபாண்டியன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையிலும், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய செயலாளர் எஸ்.வி. செந்தில் குமார் முன்னிலையில் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில், ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பாரதிய ஜனதா கட்சியில் வாய்ப்பு கிடைக்காததால் மட்டுமே அதிமுகவில் சேர்ந்து தற்போது வாய்ப்பு பெற்று இருக்கிறார். இருப்பினும் ஈரோடு தொகுதியை பொறுத்தவரை அதிமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் ஒன்றுதான். ஈரோடு தொகுதியை பொறுத்த வரை இலைக்கும் தாமரைக்கும் வித்தியாசமே கிடையாது.



விளங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற விஜயதாரணி என்பவர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது அவருக்கு நாடாளுமன்ற தொகுதி கொடுக்கப்படவில்லை. இதிலும் அவர் ஏமாந்து போய் உள்ளார். மோடி அரசு ஒரே மதம் தான் இருக்க வேண்டும் என நினைக்கிறது. மற்றவர்களை பிரிக்க நினைக்கிறார்கள்.

தமிழ் மொழிக்கு வெறும் 74 கோடி அதேபோன்று சமஸ்கிருத மொழிக்கு 1487 கோடி கொடுத்துள்ளனர்.இது நமக்கான அரசு என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். நமது இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ் மொழிக்கு வருடத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் வந்து சேரும் என தெரிவித்தார். அதேபோன்று எல்லா மொழிகளுக்கும் சமமாக கொடுக்க வேண்டும் என நாம் சொல்லி வருகிறோம். மோடி வந்தால் மீண்டும் தேர்தல் வராது யார் வெற்றி பெற்று வந்தால் தேர்தல் வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல் என்றும் கூறினர். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை நீங்கள் அடித்து துரத்த வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் ஓட்டு போடுவது மட்டுமே என்று கூறினார். தாமரைக்கு இடமே இல்லை என உரக்கச் சொல்லுங்கள் இலையும் காணாமல் போகும், இலையும் தாமரையும் ஒன்றுதான் என்று தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...