பணம் காசு சம்பாதிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை - தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேச்சு

வருடா வருடம் நான்காயிரம் கோடி ரூபாய் பணம் மத்திய அரசுக்கு திமுக அரசு திருப்பி அனுப்பி வருகிறது. அந்தப் பணத்தை எடுத்து வேலை செய்வதற்கு ஆள் இல்லை என்று அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ரங்கம்பாளையம் பிரிவு, கோனேரிப்பட்டி பிரிவு, பொன்னிவாடி, அவிநாசிபுரம் காலனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் திறந்த வெளி வாகனத்தில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



இந்நிகழ்ச்சியில் அதிமுக மூலனூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் தலைமையிலும், பொன்னிவாடி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலையிலும் நடைபெற்றது.



அதிமுக ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசுகையில், அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா இருக்கும்போது பெண்களுக்கு நான்கு கிராம் தங்கத்தை திருமணத்திற்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்த போது நான்கு கிராம் தங்கத்தை எட்டு கிராம் தங்கமாக மாற்றி திருமணமான பெண்களுக்கு வழங்கினார்.

கடந்த மூன்று வருடங்களாக தாலிக்கு தங்கம் யாருக்குமே திமுக அரசு கொடுக்கவில்லை என்றும், மேலும் படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 50000 வழங்கப்பட்டது. தற்போது ஒரு கிராம் 55 ஆயிரம் மற்றும் திருமண உதவித்தொகை 50000 என ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டிய திமுக அரசு கொடுக்காமல் திட்டத்தையே முற்றிலுமாக நிறுத்திவிட்டது. திமுக அரசு மதுக்கடை மூலம் அதிக கடைகளை திறந்து வைத்து வருமானம் ஏற்றி வருகின்றனர்.

அதேபோல் போதை பொருள், கஞ்சா உள்ளிட்டவைகளையும் விற்பனை செய்து வருகிறது. அனைத்து விலைவாசி உயர்வுகளையும் திமுக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் கூறினர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் உள்ள திமுக அரசுக்கு உங்களுக்கு எதிராக உள்ளது. உங்களுக்கு யார் வேலை செய்வார்கள் என பாருங்கள். எனது சொந்தக் காசில் கடந்த சில வருடங்களாக மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன். மத்திய அரசிடமிருந்து பல்லாயிரம் கோடிகள் தமிழகத்திற்கு வருகிறது. இதையெல்லாம் பார்த்து மக்களுக்காக செய்வதற்கு திமுக அரசுக்கு நேரமில்லை.

இதனால் அந்தப் பணம் முழுவதும் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. வருட வருடம் நான்காயிரம் கோடி ரூபாய் பணம் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர். அந்தப் பணத்தை எடுத்து வேலை செய்வதற்கு ஆள் இல்லை. இதனால் அந்த பணம் முற்றிலுமாக திரும்பி மீண்டும் மத்திய அரசுக்கு சென்று விடுகிறது. நான் பதவிக்காக வரவில்லை உங்களுக்காக ஐந்து வருடம் வேலை செய்ய வந்துள்ளேன். பணம் காசு சம்பாதிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை.

அப்படி இருந்திருந்தால் நான் வேற தொழிலை பார்த்து இருப்பேன். இப்பவே நான் சொந்த காசில் செலவு செய்து வருகிறேன். சொந்த காசையும் செலவு செய்ய தயாராக உள்ளேன். அதை தொடர்ந்து மத்திய அரசிடம் இருந்து வரும் பணத்தையும் வாங்கி உங்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன் என தெரிவித்தார்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...