தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக தேர்பட்டி ஆதி வாக்கு சேகரிப்பு

ஆற்றல் அசோக்குமார் மக்களுக்காக செய்து வரும் 10 ரூபாய் உணவகம், 10 ரூபாயில் மருத்துவ சிகிச்சை மற்றும் கோவில்கள், அரசு கட்டிடங்கள் பராமரிப்பு ஆகியவற்றை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் தேர்பட்டி ஆதி வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மனகடவு, ஊராட்சி கொல்லப்பட்டியில் அதிமுகவை சேர்ந்த தேர்பட்டி ஆதி என்ற ஆதித்யன், வீடு வீடாக சென்று அதிமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறியும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆற்றல் அசோக்குமார் மக்களுக்காக செய்து வரும் 10 ரூபாய் உணவகம், 10 ரூபாய்யில் மருத்துவ சிகிச்சை மற்றும் கோவில்கள், அரசு கட்டிடங்கள் பராமரிப்பு, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை வழங்கி உள்ளதை சுட்டிக்காட்டி ஆதரவு கோரினார்.



மேலும் அனைத்து கிராமங்களுக்கும் ஆற்றல் அசோக்குமாரின் சேவையை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியதால் பொதுமக்கள் எவ்வாறு பாதிப்படைந்துள்ளனர் என்பதை எடுத்துக் கூறியும், தாலிக்கு தங்கம், ஆடு, கறவை மாடு, கோழி வழங்கும் திட்டம், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, கிராமம் தோறும் அம்மா கிளினிக், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா மருந்து பெட்டகம், படித்த பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரம் நிதி உதவி போன்ற எண்ணற்ற திட்டங்களை மீண்டும் கொண்டுவர அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...