அரிசிக்கு ஜிஎஸ்டி போட்டவர் மோடி அதற்கு உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி - வெள்ளகோவிலில் திமுக வேட்பாளர் பிரகாஷ் புகார்

எதிரியாக இருக்கலாம், ஆனால் துரோகியாக இருக்கக் கூடாது. தற்போது அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் துரோகிகள் என்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் விமர்சனம் செய்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட அறிவொளி நகர் பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் வெள்ளகோவில் நகர திமுக செயலாளர் சபரி முருகானந்தம் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இதில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் கூறுகையில், அரிசிக்கு ஜிஎஸ்டி வரி போட்டவர் மோடி. அதற்கு உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதா இருக்கும்போது கையெழுத்து போட முடியாது என மறுத்துவிட்டார். மோடியா லேடியா உன்னை ஒரு கை பார்க்கிறேன் என கூறியதாக தெரிவித்தார்.

ஜெயலலிதா இறந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி அனைத்திற்கும் கையெழுத்து போட்டு விட்டார். எதிரியாக இருக்கலாம் துரோகியாக இருக்கக் கூடாது. தற்போது அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் துரோகிகள். மேலும் அறிவொளி நகர் பகுதியில் பேருந்து நிற்காமல் செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதற்கு ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் நீங்கள் அதிமுக கவுன்சிலரை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அது நான் தவறு என சொல்லவில்லை அவர் சொன்னால்தான் நிறுத்துவார்கள். இல்லையென்றால் நீங்கள் ஒன்றிணைந்து மனுவாக எழுதி எங்களது மாவட்டச் செயலாளரிடம் கொடுங்கள் பேருந்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...